Showing posts with label Tamil Kavithaigal. Show all posts
Showing posts with label Tamil Kavithaigal. Show all posts

Monday, January 27, 2014

Tamil Kavithaigal

தான்தான் அழகு என் மார்தட்டிய மலர்களிடம் சண்டையிட்டேன் ஏன் தெரியுமா ?
பெண்ணே உன் புன்னகைக்கு முன்னால்
பூக்கள் எல்லாம் காய்ந்து போன காகிதம்தான் ....................

---------------------------------------------------------------------------------------------------------


வாழ்க்கையை
நாம் துரத்துகிறோம்..
சில நேரங்களில்
வாழ்க்கை
நம்மையே துரத்திவிடுகிறது..

-----------------------------------------------------------


நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..

---------------------------------------------------------


தொலைந்து போன
நாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..

-------------------------------------------------


உதாரணமாக மற்றவரை
நாம் சொன்னது போதும்..
மற்றவர் நம்மை
உதாரணமாகச் சொல்ல உழைப்போம்..

-----------------------------------------------------------------


நீ சொல்ல சொல்ல
நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
நீ என்ன சொல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் என்ன கேட்கிறேன் எனத்தெரியவில்லை..